ஆயர் கூனிங்; 19 வாக்களிப்பு மையங்களை உள்ளடக்கி 63 வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டன
தாப்பா, 26/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 19 வாக்களிப்பு மையங்களை உள்ளடக்கிய அனைத்து 63 வாக்குச்சாவடிகளும், இன்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
18 வாக்களிப்பு மையங்கள் மாலை 6 மணி திறந்திருக்கும் நிலையில், தோ தண்டெவா சக்தி தேசிய பள்ளியில் திறக்கப்பட்டிருக்கும் ஒரு வாக்களிப்பு மையம் மாலை 4 மணிக்கு மூடப்படும்.
31 ஆயிரத்து 281 வாக்காளர்கள், அப்பகுதிக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
பேராக், தாப்பாவில் உள்ள மெர்டெகா மண்டபத்தில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில், தேர்தலின் முடிவுகள் இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பின் போது, 500 போலீஸ் உறுப்பினர்களிலிருந்து 93.4 விழுக்காட்டினர் தங்கள் துணைவியாருடன், இரண்டு வாக்களிப்பு மையங்களில் தங்களின் கடமையை நிறைவேற்றினர்.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர், இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.
இதில், தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முஹமட் யுஸ்ரி பகிர் போட்டியிடும் வேளையில், பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து அப்துல் முஹைமின் மாலெக் மற்றும் மலேசிய சோசலிச கட்சி பி.எஸ்.எம்மின் பொது செயலாளர் பவானி கன்னியப்பன் ஆகியோர் தேர்தல் களம் காண்கின்றனர்.
Source : Bernama
#AyerKuningByElections
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews