ஆடவரைக் கடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக எண்மர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, 25/04/2025 : கடந்த வாரம், ஜோகூர், ப்ளென்டோங்கில், வீடொன்றில் ஆடவர் ஒருவரை அடைத்து வைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பெண் ஒருவர் உட்பட எண்மர் இன்று ஜோகூர் பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.
மஜிஸ்திரேட் அதிஃபா ஹசிமா வஹாப் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டப் பின்னர், 19-இல் இருந்து 25 வயதிற்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
25 வயதான முஹமட் அக்மால் ஹஃபிபி முஸ்தாபா கமால், 23 வயதான அஹ்மாட் ருஸ்டி ஜுமாடி, 25 வயதான முஹமட் நூர் ஷாபிக் அப்துல்லா, 19 வயதான முஹமட் ஹைக்கால் சுல்கர்னைன், 23 வயதான முஹமட் அமிருல் ஹக்கிம் ஷம்சூரி, 20 வயதான முஹமட் டெனிஸ் ஹக்கிம் கமாருடின், 19 வயதான ஷம்சூல் ஹமிசி சைஃபூல் ரசாலி மற்றும் 22 வயதான நுரெட்ரியானா பால்கிசி அனபெல்லா நோரஸ்மேன் ஆகியோரே அந்த எண்மராவர்.
குற்றவியல் அம்சங்களைப் பயன்படுத்தி 22 வயதுடைய முஹமட் ஃபாரிஸ் ஷாமி முஹமட் ரிட்சுவானுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த எண்மர் மீதும் முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அதே நபரிடமிருந்து 3,000 ரிங்கிட்டை பெறும் வரை அவரை தாக்கப்போவதாகவும் அவரை விடுவிக்கப்போவதில்லை என்று மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது இரண்டாவது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 506; செக்ஷன் 384, செக்ஷன் 342 மற்றும் செக்ஷன் 323 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஏழு ஆடவர்கள் தலா 16,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுக்கப்பட்ட நிலையில், நுரெட்ரியானா பால்கிசி அனபெல்லா 14,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுக்கப்பட்டார்.
இவ்வழக்கின் தீர்ப்பு, ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்படும்.
Source : Bernama
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews