ஆயர் கூனிங்கில் உள்ள பன்றிப் பண்ணைகள் ஆற்று மாசுப்பாட்டை ஏற்படுத்தவில்லை
ஆயர் கூனிங், 25/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற பகுதியில் உள்ள ஒன்பது பன்றி பண்ணைகள், கழிவுகளை அகற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, ஆற்றில் எவ்வித மாசுப்பாடுகளையும் ஏற்படுத்தவில்லை.
இவ்விவகாரம் குறித்து அறிவியல் ஆய்வு ஒன்றை, பேராக் மாநில கால்நடை சேவை துறை, டி.வி.எஸ் மேற்கொண்டதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு கூறினார்.
பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகள் முதலில் குளத்தில் சேகரிக்கப்பட்டு, அறிவியல் முறைகளின்படி வடிகட்டப்பட்டு ஆற்றில் விடப்படுவதாக டி.வி.எஸ் நிபணர்கள் தம்மிடம் தெரிவித்ததாக டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் மாசு, பாதுகாப்பான அளவில் 10-க்கும் குறைவாக உள்ளதாக, அவர் குரிப்பிட்டார்.
நேற்றிரவு, மடானி அரசாங்கத்தின் இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், முஹமட் சாபு செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டத்தை முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய, அனைத்து பன்றி பண்ணைகளிலும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வதோடு, விதி மீறல்கள் அல்லது மாசுப்பாடுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Source : Bernama
#AyerKuning
#AyerKuningByElections
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews