கோலாலம்பூர், 20/03/2025 : அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் நோன்பு பண்டிகையை முன்னிட்டு, டோல் கட்டணத்தில் கழிவு வழங்குவது குறித்து, மடானி அரசாங்கம் கூடிய விரைவில் அறிவிக்கும்.
கடந்த மாதம், சீனப் புத்தாண்டின் போது, வழங்கப்பட்ட டோல் கட்டண கழிவைப் போன்று அது அமையும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி சுட்டிக்காட்டினார்.
“கண்டிப்பாக இருக்கின்றது. ஏனெனில் நாம் சீனப் புத்தாண்டின் போது அதனை அமல்படுத்தினோம். நோன்பு பொருநாளின் போது எப்படி அதனை அமல்படுத்தாமல் இருப்போம். பொறுமை, சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது இலவச டோல் சேவை இருக்கும். சீன புத்தாண்டில் மேற்கொண்டது போல நாங்கள் அமல்படுத்துவோம். நாங்கள் என்ன செய்வோம்? 50 விழுக்காடு கழிவு. கொஞ்சம் பொருமையாக இருங்கள் நாங்கள் கலந்தாலோசித்து வருகிறோம்,” என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் உள்ள பொதுப்பணி வளாகத்திற்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட அலுவல் பயணத்திற்குப் பின்னர், நந்தா லிங்கி அதனை கூறினார்.
நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களிடம் 2 கோடியே 6 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டை வழங்கி, கடந்த மாதம் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, இரண்டு நாள்களுக்கு வழக்கமான டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவை, மடானி அரசாங்கம் ஒப்புக் கொண்டதை நந்தா சுட்டிக்காட்டினார்.
Source : Bernama
#ToolFees
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews