மலேசியா

7 சட்டங்களுக்கு மாமன்னர் ஒப்புதல்

கோலாலம்பூர், 04/01/2025 : கடந்த ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கி டிசம்பர் நான்காம் தேதி வரை நடைபெற்ற 15-வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான மக்களவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏழு சட்டங்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை மக்களவை கூட்டத்தில் அமைச்சர்களின் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னதாக தமது பிரகடனத்தில் மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இதனை அறிவித்தார்.

2025ஆம் ஆண்டு விநியோகச் சட்டம் , 2024-ஆம் ஆண்டு நிதி சட்டம், 2024-ஆம் ஆண்டு வரி வசூலிப்பு, நிர்வாகம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் சட்டம் மற்றும் 2024-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட லபுவான் வணிக வரி சட்டம் ஆகியவை இதில் அடங்கும் என்று டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

இதனிடையே, மக்களவை கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அரசியல் முதிர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia