KKDW கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறைகளுடன் உறவை மேம்படுத்துவீர்

KKDW கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறைகளுடன் உறவை மேம்படுத்துவீர்

கோலாலம்பூர், 09/10/2024 : புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, KKDW-இன் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தனியார் துறை உடனான உறவுகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

கிராமப்புற வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் தனியார் துறையை ஒரு வியூக பங்காளியாக KKDW அணுக வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

இது தவிர, அரசு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும், தனியார் துறையின் ஒத்துழைப்பும் கிராமப்புற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒத்துழைப்பு புதுமைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சியை விரைவுபடுத்தி மிகவும் பயனுள்ள முடிவுகளை அடைய முடியும். தனியார் துறையின் ஈடுபாடு, தொழில்நுட்ப நிபுணத்துவம், மூலதனம் மற்றும் பரந்த சந்தைக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சியைத் துரிதப்படுத்தலாம் என்றார் அவர்.

சிறந்த முடிவுகளை அடைவதற்கு, KKDW இன் கீழ் உள்ள நிறுவனங்களும் வளங்கள், திறன் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்வதில் கவனம் செலுத்தும் கட்டமைப்பை செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது, கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற சிக்கலான சவால்களை எதிர்கொள்ள அனைத்து நிறுவனங்களும் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் என்று டாக்டர் அஹ்மாட் சாஹிட் விளக்கினார்.

Source : Bernama

#KKDW
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.