சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்

சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்

சுங்கை சிப்புட், 01/10/1014 : ஈவூட்  புதிய தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார். 

இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2.30-க்கு நடைபெறவுள்ளதாக அதன் தகவல் பிரிவு தலைவரும் கோலகங்சார் ஊராட்சி மன்ற உறுப்பினருமான கோபி இராமசாமி தெரிவித்தார்.

பிரதமர் முதன் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளியை தொடக்கி வைக்கிறார்.

இப்பள்ளி ஒரு கோடியே முப்பது லட்சம் ரிங்கிட் செலவில் அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இப்பள்ளி விசாலமான நிலப்பரப்பை கொண்டுள்ளதால், காலப்போக்கில் அதிகமான வசதிகளை இங்கு உருவாக்க போதிய இடம் உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Source : Bernama

#Anwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.