கோலாலம்பூர், 29/09/2024 : கண்ணதாசன் அறவாரியமும் கூட்டரசுப் பிரதேச ம.இ.காவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘வண்ணம் தீட்டும்’ நூல் வழங்கும் விழா 27/09/2024 அன்று நேதாஜி மண்டபம், ம.இ.கா தலைமையகம், கோலாலம்பூரில் சிறப்பாக நடைபெற்றது. டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் நூல் வழங்கி வாழ்த்தி பேசினார்.
தேவகி கிருஷ்ணன் தயாரித்திருந்த இந்த புத்தகம் நம் மாணவர்களுக்கு ஓவியக் கலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் என எம் சரவணன் தனது உரையில் கூறினார். இது போன்ற முயற்சிகள் நம் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ஒரு தூண்டுகோளாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#DatukSeriMSaravanan
#ThevakiKrishnan
#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#Entamizh
Comments are closed, but trackbacks and pingbacks are open.