மக்கோட்டா சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா

மக்கோட்டா சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா

மக்கோட்டா , 27/09/2024 : மஇகாவின் தேசிய தலைவர் தான் ஸ்ரீ எஸ்ஏ.விக்னேஸ்வரன் ஜோகூர் மக்கோட்டா சட்டமன்றத்தின் குடிமக்களுடன் சிலோனிஸ் மண்டபத்தில் இரவு உணவு விழாவை கடந்த 25 செப்டெம்பர் நடத்தினார்.

செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்கோட்டா சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்) மற்றும் பெரிகாடன் நேஷனல் வேட்பாளர்களுக்கு இடையே நேரடிப் போட்டி இடம்பெறும்.

முந்தைய மாநிலத் தேர்தலின் போது வென்ற இடத்தைப் பாதுகாக்க, 40 வயதான க்ளுவாங் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லாவை தேசிய முன்னணி பரிந்துரைத்துள்ளது.
61வயதான முன்னாள் ஜோகூர் கால்பந்து வீரர் முகமது ஹைசன் ஜாஃபர் களமிறக்குகிறது பெரிகாதான் நெசினல்.

மேலும் , செனட்டர் டத்தோ ஆர்.நெல்சன், தேசிய மஇகா துணைத் தலைவர், துவான் அஸ்னான் தமின், ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர், துவான் ராவன்குமார், ஜோகூர் மாநில ஒற்றுமைபாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் & ஜோகூர் மாநில மஇகா தலைவர், திருமதி சரஸ்வதி, கெமெலா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மஇகா மகளிர் தலைவி, டத்தோ டாக்டர் ஆனந்தன், மஇகா பொதுச்செயலாளர், திரு.அரவிந்த் கிருஷ்ணன், தேசிய மஇகா இளைஞர் பிரிவு தலைவர், டத்தோ வெள்ளையன், ஜோகூர் மாநில மஇகா துணைத் தலைவர், மற்றும் மத்திய, மாநில பிரதேச மஇகா தலைமைதுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.