மக்கோத்தா வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் – எஸ்.பி.ஆர் வேண்டுகோள்

மக்கோத்தா வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - எஸ்.பி.ஆர் வேண்டுகோள்

குளுவாங், 24/09/2024 : செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம், அத்தொகுதி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற சில இடைத் தேர்தல்களில் வாக்களிக்க வெளியேறியவர்களின் அடிப்படையில், இந்த இடைத் தேர்தலிலும் மிக அதிகமான விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

”அதிகமானோர் வாக்களிப்பர் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நெங்கிரியில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் வாக்களிக்கும் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது”, என்று அவர் கூறினார்.

இன்று, குளுவாங், மக்கோத்தா முகாமின், மக்கோத்தா மண்டபத்தில் நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பைப் பார்வையிட்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்கோத்தா முகாமில் உள்ள 3,865 பதிவுப் பெற்ற வாக்காளர்கள் எட்டு வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.

Source : Bernama

#Elections
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaLatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.