மலேசிய இந்து சங்கம் : கிள்ளான் வட்டாரப் பேரவையின் அமைப்பு கூட்டம்

மலேசிய இந்து சங்கம் : கிள்ளான் வட்டாரப் பேரவையின் அமைப்பு கூட்டம்

21/8/2024 அன்று இரவு 7.30 மணியளவில், மலேசிய இந்து சங்கம் கிள்ளான் வட்டாரப் பேரவையின் அமைப்பு கூட்டம் இனிதே நடைபெற்றது. நீண்ட நாட்களாக முடங்கியிருந்த இவ்வட்டாரம் புத்துயிர் பெற்றது. இவ்வட்டாரத்தின் தலைவராக திரு. தரமலிங்கம் ராஜு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்புக்கூட்டத்தை சிலாங்கூர் மாநிலப் பேரவையின் தலைவர் தொண்டர்மாமணி திரு. மனோகரன் அவர்கள் வழிநடத்தினார். மத்திய செயலவை உறுப்பினர் திருமதி பிரேமலா (காயத்ரி) சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் ம. இ.ச துணைத் தலைவர் தொண்டர்மணி திருமதி சரஸ்வதி, மாநில கெளரவ செயலாளர் மற்றும் பொருளாளர் கலந்துக்கொண்டு புதிய கிள்ளான் வட்டாரப் பேரவைக்கு ஆதரவு நல்கினர். 36 ம.இ்.ச கிள்ளான் வட்டார உறுப்பினரகள் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய செயலவைக் குழுவினருக்கு நல்வாழ்த்துகள்.