என் தமிழ்

நாட்டுடன் ஒத்துழைப்பு வியூகம் (CSS) 2016-2020 கோலாலம்பூரில் துவக்கி வைக்கப்பட்டது

28mar4

மலேசியா – உலக சுகாதார அமைப்பு இணைந்து நாட்டுடன் ஒத்துழைப்பு வியூகம் (CCS) 2016-2020 நேற்று 28-03-2017  கோலாலம்பூரில் கையெழுத்தாகி துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் உலக சுகாரத்துறை அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குநர் டாக்டர் ஷின் யூங் ஸூ ஆகியோர் பங்குபெற்று துவக்கி வைத்தனர்.

மலேசிய சுகாதாரத்துறையும் உலக சுகாரத்துறையு கூட்டாக இணைந்து சிறப்பான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த முடியும் இந்த கூட்டு முயற்கி மூலம் டெங்கு முதலிய நோய்களை தடுப்பதில் நாம் சிறப்பாக செயல்பட முடியும் என டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

1958 முதல் உலக சுகாரத்துறை அமைப்பில் மலேசியா உறுப்பினராக இருக்கிறது. தொடர்ந்து உலக சுகாரத்துறை அமைப்புடன் இணைந்து பல நல்ல திட்டங்களை சிறைப்பாக செயல்படுத்துவோம் எனவும் டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

28mar6 28mar3 28mar5

Scroll to Top