ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இந்திய வாலிபர்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இந்திய வாலிபர்

flag

நவம்பர் 27, இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சித்தார்த்த தர் (வயது 31). முஸ்லிம் மதத்திற்கு மாறிய அவர் தனது பெயரை அபுரூமாயஸ் என மாற்றிக்கொண்டார். திடீரென அவர் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் சித்தார்த்த தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்பிறகு சித்தார்த்த தர் மனைவி குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். தற்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சிரியாவில் போரில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

லண்டனில் இருந்து வெளியேறிய அவர் அங்கிருந்து பஸ் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று பின்னர் சிரியாவுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தில் இருந்து அவர் செல்லும்போது மனைவி கர்ப்பமாக இருந்தார். இப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையுடன் துப்பாக்கி ஏந்தி நிற்கும் படத்தை சித்தார்த்த தர் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

எனது குழந்தை இஸ்லாமிய தேசத்தில் பிறந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய தேசத்திற்காக நான் போராடுவது நான் செய்த பாக்கியம். இங்கிலாந்துக்காரன் என்பதை விட இஸ்லாமிய தேசத்துக்காரன் என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.