அமெரிக்க பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

அமெரிக்க பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

Gun-murderer-638x424

அக்டோபர், 25 அமெரிக்காவி்ன் சியாட்டில் அருகே உள்ள மேரிஸ்விலே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவன் ஒருவன் தான் கொண்டு வந்த துப்பாக்கியை கொண்டு சக மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான். இச்சம்பவத்தி்ல் இரு மாணவர்கள பலியாயினர். நான்கு பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் ஆண்கள் மற்றும் பெண்களாவர். மாணவர்களை சுட்டுகொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.