பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை : போலீஸ் – போராட்டக்காரர்கள் மோதல்

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை : போலீஸ் - போராட்டக்காரர்கள் மோதல்

PAKISTAN_1_2062990g

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன் போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் கூடியுள்ள இம்ரான்கான் ஆதரவாளர்களை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்று வருகின்றனர். போலீஸ் மீது பெட்ரோல் குண்டுகள், கற்களை வீசி போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் மோதல் மூண்டது.