சென்னை, 12 ஜனவரி 2026 : தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026-இல். உலகத் தமிழர்களைத் தமிழால் இணைக்கும் இந்த இலக்கிய, வர்த்தக, சமூக ஒருங்கிணைப்பு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழ் புலம்பெயர் கண்காட்சி 2026-ல், சன்ஷைன் கல்வி குழுமம் தனது இந்தியக் கிளையான சன் கிட்ஸ் இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டை அதிகாரப்பூர்வமாகத் மாண்புமிகு எஸ். எம். நாசர்
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அயலக துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சன் சைன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர் வி ஷாம்பிரசாத் மற்றும் இணை இயக்குனர் திருமதி பரமேஸ்வரி அவர்கள் சன் சைன் கல்வி குழுமம் உலக அரங்கில் ஒரு பிரம்மாண்டமான இடத்தை இந்த தருணத்திலே எட்டியுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இந்தக் கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர், இது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் உலகளாவிய வலிமையையும் ஒற்றுமையையும் பிரதிபலித்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது எங்களின் உலகளாவிய கல்விப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு அற்புதமான மற்றும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது என்றார்.
டாக்டர் ஆர் வி ஷாம்பிரசாத் சிறப்பு பேச்சாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அயலகத்தில் தமிழர்களின் மேன்மை என்கின்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமைச்சர் பெருமக்கள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வணிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







