மார்க்கெட் டல்லடிப்பதால் மாடலிங் தொழிலில் ஸ்ரேயா

மார்க்கெட் டல்லடிப்பதால் மாடலிங் தொழிலில் ஸ்ரேயா

Shriya-Saran

சென்னை: பட வாய்ப்பு கைகூடாததால் மாடலிங் செய்ய தயாரானார் ஸ்ரேயா.ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார் ஸ்ரேயா. திடீரென்று அவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. லட்சுமிமேனன், சமந்தா, ஸ்ருதி ஹாசன் போன்ற இளம் நடிகைகளின் அதிரடி வரவே இதற்கு காரணம் என்று கோலிவுட்டில் பேச்சு உள்ளது. தற்போது தமிழ் படம் எதுவும் ஸ்ரேயா கைவசம் இல்லை. ஏற்கனவே கவர்ச்சியாக நடித்து வந்த ஸ்ரேயா ‘சந்திரா‘ என்ற படத்தில் டாப்லெஸ் ஆக நடித்தார். பிறகு நாகார்ஜுனாவின் ‘மனம் படத்தில் 50 வயது பெண்ணாக நடித்தார். எதுவும் பலன் அளிக்கவில்லை. தற்போது இந்தியில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமுமே நடித்து வருகிறார்.  திரிஷா, நயன்தாரா போன்ற தனது வயதொத்த நடிகைகள் இன்னும் பீல்டில் மல்லுகட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களைப்போல் தனக்கும் மீண்டும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ஸ்ரேயா. இதற்கிடையில் தனது அழகு தோற்றத்தை வெளிப்படுத்த மாடலிங் தொழில் மீது கவனம் திருப்பி இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த மாடல் அழகிகள் அணிவகுப்பில் கலந்துகொண்ட ஸ்ரேயா லோகட் ஜாக்கெட், லோ ஹிப் சேலை கட்டிக்கொண்டு ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்தார்.