கோலாலம்பூர், 14 அக்டோபர் 2025 : அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சி மாநாட்டிற்கான இறுதி ஏற்பாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஆய்வு செய்தார்.
மதிப்புமிக்க உச்சிமாநாட்டின் தலைவராக, நடைபெறும் ஒவ்வொரு கலந்துரையாடலும் பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தவும், அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்களுக்கும் பயனளிக்கவும் ஒரு உறுதியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உச்சிமாநாடு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, முழு அரசு இயந்திரமும் தொடர்புடைய நிறுவனங்களும் மிகுந்த கவனத்துடனும், அதிக அர்ப்பணிப்புடனும் சிறந்த தயாரிப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பிரதமர் தனது நன்றியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.





