மலேசியாவட்டாரச் செய்திகள்

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் ஒப்பனை கலை பயிற்சி பட்டறை

நெகிரி சென்பிலான், 28/04/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் சரண்யா ஒப்பனை கலைஞருடன் இணைந்து 27 ஏப்ரல் 2025 அன்று நெகிரியில் ஒப்பனை கலை பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது. இப்பயிற்சி வழி பங்கேற்பாளர்களுக்குப் பலவிதமாக ஒப்பனை கலைத்திறன் நுணுக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இது சுயமாக கைத்தொழில் முனைவோருக்கு அடித்தாளமாகவும் அமைந்தது.

MKBBT இன் தேசிய மற்றும் மாநில தலைவர் திரு. முருகன் இந்த பட்டறை நிகழ்வில் கலந்து கொண்டார். அனுபவம் வாய்ந்த ஒப்பனை கலைஞர் புவான் எஸ். சரண்யா அவர்கள் பட்டறையில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு ஒப்பனை கலை குறித்த நுனுக்கங்களை வழங்கியதுடன் தொழில் முனைவோருக்கான ஊக்கத்தையும் வழங்கினார். தொடர் நிகழ்வாக நடைபெறும் இத்தகைய பட்டறைகளில் இது 6 வது பயிற்சி பட்டறையாகும்.

#MKBBT
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews