உலகம்சந்தைமலேசியா

சூரிய சக்தி துறையை மேம்படுத்துவதில் மலேசியா – மாலத்தீவு உறவு வலுப்படுத்தும்

புத்ராஜெயா, 28/04/2025 : மிதக்கும் சூரியப்பலகம், பாதுகாப்பு மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைபை மேற்கொள்வதன் மூலம் மலேசியாவும் மாலத்தீவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

கடல் சார்ந்த இரு நாடுகளும் சூரிய சக்தி துறையை மேம்படுத்துவதில் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“இந்நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும். இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த இருதரப்பு உறவுகள் உள்ளன. இரண்டும் கடல்சார் நாடுகள், அதாவது ஒத்துழைப்புக்கான பகுதி பரந்த அளவில் திறந்திருக்கும்”, என்று அவர் கூறினார்.

1968-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய, இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிப்பதாக, புத்ராஜெயாவில் மாலத்தீவு அதிபர் உடனான் செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வார் கூறிப்பிட்டார்.

STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, TVET, உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, ஒத்துழைப்பை மேம்படுத்தும் துறைகளில் மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்சு தமது உறுதிப்பாட்டை தெரிவித்தார்.

“எங்களின் கலந்துரையாடல்கள் பல நம்பிக்கைக்குரிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும். பாதுகாப்புத் துறை மற்றும் பிற முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்தி முடிப்பதில் எங்கள் ஆவலை நான் வெளிப்படுத்தியுள்ளேன். ஹலால் தொழில் மற்றும் இலக்கவியல் பொருளாதாரத்தில் மலேசியாவின் முன்னேற்றம் மற்றும் தலைமைத்தும் உண்மையிலேயே பாராட்டக்கூடியது”, என்றார் அவர்.

பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இரண்டு பரிமாற்றக் குறிப்புகளையும் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டதை அவ்விரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

Source : Bernama

#MaldivesMalaysia
#PmAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews