அமெரிக்க வரி விதிப்பு; மக்களின் நம்பிக்கை வலுப்படுத்தப்பட வேண்டும்
ஈப்போ, 25/04/2025 : அமெரிக்க வரி விதிப்பு அமலாக்கத்தை எதிர்கொள்ளும் பொருட்டு, உள்நாட்டுத் திறன், மக்களின் நம்பிக்கை மற்றும் தன்னிச்சையாக செயல்படும் அம்சங்களை மலேசியா வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனை அடைவதற்கு, பிற நாடுகளுடன் தற்போதுள்ள கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
”ஆசியானில் முதல் வலையமைப்பு, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியாவுடன் ஆகும். ஐரோப்பிய புதிய சந்தைகளைத் திறப்பது. இப்போது நாம் பிரேசிலை நெருங்குவோம். இரு தினங்களுக்கு முன்பு நான் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டேரஸ், பிரேசில் அதிபர், துருக்கி அதிபர் ஆகியோருடன் இயங்கலை கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தேன். எவ்வாறு நமது சந்தையை விரிவுபடுத்துவது என்பது பற்றி விவாதித்தோம். உள்நாட்டு சுற்றுலாவை எப்படி அதிகரிப்பது குறித்தும் பேசினோம்”, என்று அவர் கூறினார்.
இன்று, பேராக், ஈப்போ, சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தின் புதுப்பிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
Source : Bernama
#PMAnwar
#USAImportTax
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews