மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை ஆய்வு செய்யப்படும்
புத்ராஜெயா, 24/04/2025 : 2025ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கேடிஎன்கே குறித்து அனைத்துலக நாணய நிதியம், IMF வெளியிட்டிருக்கும் அறிக்கையை பேங்க் நெகாராவும் நிதியமைச்சும் ஆய்வு செய்யவுள்ளன.
எதிர்வரும் மே ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான உலக பொருளாதார கண்ணோட்டம் தொடர்பான முழு அறிக்கை வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி கணிப்புகளில் ஏற்பட்ட சரிவில் மலேசியா மட்டுமல்லாது அமெரிக்கா, சீனா மற்றும் பல நாடுகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“இந்த திருத்தம் அனைத்துலக அளவில் அமெரிக்கா, சீனா மற்றும் பெரும்பாலான நாடுகளை உட்படுத்தியுள்ளது. பேங் நெகாரா மற்றும் கருவூலத்திற்குச் சற்று மந்தமாக உள்ளது. இப்போது நாங்கள் மறுபரிசீலனை செய்து அறிவிப்போம். மே 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு முழுமையான அறிக்கையை வெளியிடுவேன்,” என்றார் அவர்
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சுங்கத் துறையின் நோன்புப் பெருநாள் கொண்டாடத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தப் போது அவர் தெரிவித்தார்.
முன்னதாக, 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் இவ்வாண்டுக்கான மலேசியாவின் உண்மையான கேடிஎன்கே கணிப்பு முந்தைய காலங்களில் பதிவான 4.7 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் 4.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
Source : Bernama
#PmAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews