தேசிய முன்னனியை குறை கூறியே ஆட்சியை கைபற்றியவர்கள்.. இன்று இந்தியர்களின் உரிமைகளை காப்போம்எனும் வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவதின் கதைதான் என்ன என மஇகா தேசிய இளைஞர் பிரிவின்செயலாளர் திரு.அர்விந் கிருஷ்ணன் மக்கள் கூட்டனியின் திடிர் அதிரடி நடவடிக்கைகளை சாடினர். அன்று இந்தியர்களின் ஆலயங்களை உடைத்து இந்தியர்களை புறக்கணிக்கிறது தேசிய முன்னனி என சாடியவர்கள் இன்று இந்தியர்களின் உணவகத்தை உடைக்க துணிந்து விட்டனர் என அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி அளவில் கிள்ளானில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான பார்க்கிளே கார்னர் எனும் உணவகத்தை உடைக்க மாவட்ட நில அலுவலக அதிகாரிகள், கிள்ளான் நகராண்மை கழக