மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆண்டு திருமுறை விழா

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆண்டு திருமுறை விழா

16august_mhs_selangormeet
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆம்டு திருமுறை விழா வருகின்ற 20/08/2017 காலை 08.00 மணிக்கு பண்டார் உத்தாமா டாமான்சாரா, எப்பிங்காம் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவிருக்கின்றது. மாநிலத் தலைவர் தொண்டர்மணி திரு. மு.முனியாண்டி அவர்கள், பொதுமக்கள் அனைவரையும் திருமுறை விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். இவ்விழாவிற்கு மாண்புமிகு கணபது ராவ் மற்றும் மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் இருவரும் சிறப்பு வருகை மேற்கொள்வர். மேல் விவரங்களுக்கு தொண்டமணி திரு. மு.முனியாண்டி அவர்களை (012-619 4970) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மலேசிய இந்து சங்கம் – சிலாங்கூர் மாநிலப் பேரவையின் தலைவர் தொண்டர்மணி திரு. மு. முனியாண்டி இன்று  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.