பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவப் பிரிவுகள்.

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவப் பிரிவுகள்.

5

பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவப் பிரிவுகள் கட்டப்பட்டுள்ளன. அதன் துவக்க விழா செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவாண் கலந்து கொண்டு புதிய பிரிவுகளை திறந்து வைத்தார்.இதில் ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவாண் பேசுகையில், இம்மருத்துவமனையில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் டயாலிஸிஸ் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் மதிப்பில் முழு உடல் பரிசோதனை செய்யும் ஊவு ஸ்கேன் பிரிவும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.