நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும் – ம.இ.கா தலைமையகத்தில் கலந்துரையாடல்

நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும் - ம.இ.கா தலைமையகத்தில் கலந்துரையாடல்

15mar4

நேற்று 15/03/2017 மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது. “நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும்” எனும் கருப்பொருளோடு இரு பிரிவினரிடையே இக்கலந்துரையாடல் நடைபெற்றதோடு பல ஆரோக்கியமான தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், டத்தோ P.கமலநாதன், டத்தோ M.சரவணன் ஆகியோருடன் மற்ற ம.இ.கா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாதிரியான கலந்துரையாடல்கள் அரசியல் தலைவர்களுக்கு ஒரு வழிக்காட்டாக அமைவதோடு அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும். மேலும், மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு மையமும் இதுபோன்ற கலந்துரையாடல்களை அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் தொடர்ந்து நடத்தும் திட்டம் வைத்துள்ளனர். இவ்வாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.இ.காவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார்.

15mar315mar1 15mar2  15mar5 15mar6