தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம்: ரம்யா நம்பீசன்

தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம்: ரம்யா நம்பீசன்

remya-nambeesan300

ஜனவரி 27, அருள்நிதி-ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து வரும் படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’. ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தை ஜே.எஸ்.கே.சதீஷ் உடன் லியோ விஷன்ஸ் மற்றும் செவன்ஜி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறாராம். இதுகுறித்து அவரே கூறும்போது, ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் நான் ஒரு பள்ளி ஆசிரியையாக வருகிறேன். ‘குள்ளநரிக்கூட்டம்’ படத்துக்கு பிறகு எனக்கு கிராமத்து சாயலில் ஒரு கதாபாத்திரம் அமைந்துள்ளது.

இவ்வகையான நகைச்சுவை படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்டநாளாக காத்திருநதேன். ஸ்ரீகிருஷ்ணா இந்தை கதையை கூறியதும் சற்றும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இப்படத்தில் அருள்நிதியுடன் நடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர் என்றாலும், அவர் அனைவரிடமும் கனிவாக நடந்து கொண்டார். இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றம்தான். அத்தகைய நேரங்களில் அருள்நிதி எனக்கு பேருதவி புரிந்துள்ளார் என்றார்.

அவரது இசை அனுபவம் பற்றி கேட்டபோது, இப்படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. இருந்தாலும் காதல் கனிரசம் என்று தொடங்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மலையாளத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் உள்ளது. நேரம் கூடினால் கண்டிப்பாக செய்வேன் என்று கூறினார்.