ஜோங் நாமை கொலை செய்தது வட கொரியாதான் – சிவராஜ் சந்திரன்

ஜோங் நாமை கொலை செய்தது வட கொரியாதான் - சிவராஜ் சந்திரன்

img-20170224-wa0004

வட கொரியா தலைவர் திரு.கிம் ஜோங் உன்னின் சகோதரர் திரு ஜோங் நாமின் மரணம் பற்றி மலேசிய அரசின் விசாரனை குறித்து குறை கூறி உள்ள வட கொரிய தூதர் திரு கேங் சோலின் மலேசியாவின் மீதான பொய்யான குற்றாச்சாட்டுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என ம.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வட கொரிய ஏஜெண்ட்ஸ் மற்றும் வட கொரியாவால் நியமிக்கப்பட்ட இரண்டு பெண்கள்தான் ஜோங் நாமை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி கொலை செய்தார்கள் என்ற உண்மை உலகிற்கே தெரியும் என்றும் அவ்ர் தெரிவித்துள்ளார்.