ஜே.பி.மணிமாறன் சிகிச்சைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி – 55 கலைஞர்கள் கட்டணமின்றி பங்குபெற்றனர்

ஜே.பி.மணிமாறன் சிகிச்சைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி - 55 கலைஞர்கள் கட்டணமின்றி பங்குபெற்றனர்

27junejbmanimaran_5

ஜே.பி.மணிமாறனுக்கு இலங்கையில் நடைபெறும் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டும் முயற்சியாக விருந்துடன் கூடிய இன்னிசை இரவு நிகழ்ச்சி ஜோகூர் பாரு கலைஞர்கள் ஏற்பாட்டில் 27 ஜுன் 2017 மாலை 07.30 மணியளவில் ராயா டமான் பல்கலைக்கழக மண்டபம், ஸ்ககூடாயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜோகூர் பாரு ம.இ.கா இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் திரு. சிவகுமார் சுப்ரமணியம் ஏற்பாடுகளை எந்த வித கட்டணமும் இல்லாமல் செய்து கொடுத்திருந்தார். மலேசியா முழுவதுமிருந்தும் (ஜோகூர், கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு) மற்றும் சிங்காப்பூரில் இருந்தும் சுமார் 55 கலைஞர்கள் எந்தவித கட்டணமின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை இசையால் மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.இ.கா ஜோகூர் இளைஞர் பிரிவு பிரதிநிதி திரு. சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பெருந்தொகையை நிதியாக அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் 40,023 ரிங்கிட் வசூல் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். ஜே.பி. மணிமாறன் சிகிச்சை முடிந்து விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் விருப்பம் தெரிவித்தனர்.

 

27junejbmanimaran_1 27junejbmanimaran_2 27junejbmanimaran_3 27junejbmanimaran_4