சோனியா, ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

சோனியா, ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

so
சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஊடக நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் தவறான பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சோனியா மற்றும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி, சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டார்.