உதவித் தொகையை உயர்த்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

உதவித் தொகையை உயர்த்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

6

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும்; மாதாந்திர உதவித் தொகையை தாமதமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்; உதவித்தொகை பெறுவதற்கு தடையாக உள்ள கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும்; அரசு வேலைவாய்ப்பில் ஊனமுற்றோர்க்கான 3 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர்,திருச்சிராப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருவிடை மருதூர் ஆகிய இடங்களில் நடைபெற்றான.