இலவச உடல் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

இலவச உடல் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

14-9 breast cancer

மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில LPPKN உடன் மலேசிய ராகவேந்திர சமூகநல அமைப்பும் கோத்தா ராஜா தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவும் இந்த இலவச உடல் நலப் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி வருகின்ற 14 செப்டம்பர் 2014 ஞாயிறு அன்று காலை 08.00 மணி தொடங்கி பதிவுகள் கிள்ளான் தாமான் செந்தோசாவில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலய சிறு மண்டபத்தில் இடம்பெறும். முதலில் பதியும் 200 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை நிலையத்திற்கு சென்று வரும் போக்குவரத்துச் சேவை இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும்.

இந்த இலவச மருத்துவ பரிசோதனையில். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனை, உடல் இலவச மருத்துவ ஆசோசனையும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கிய கண்காட்சியும் மக்களுக்காக இடம்பெறும்.

ஆக முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் கலந்துகொண்டு பலனடையுமாறு பணிவன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேல் விவரங்களுக்கு 019-3521129/019-3976350 என்ற  எண்களில் ஏறபாட்டாளர்களை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு 10/08/2014 அன்று வெளியிடப்பட்டுள்ள தேசிய ம இ கா இளைஞர் பிரிவுப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.